Pages

February 24, 2011

சாதனை பெண்கள்

டாக்டர் அனிசா ராணி (இணைப்பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையம், விருத்தாசலம்):
''என்னோட சொந்த ஊர், கம்பம். பி.எஸ்சி. தோட்டக்கலை தொடங்கி, பிஹெச்.டி. வரைக்கும் கோவை வேளாண் பல்கலைக்கழகத்துலதான் முடிச்சேன். மூலிகைப் பயிரான சர்க்கரைக் கொல்லி, நெருக்கு நடவு, முந்திரியோட வீரிய ஒட்டு ரகம்னு நிறைய ஆராய்ச்சிகள் செய்தேன். குறிப்பா, முந்திரி விவசாயிகளோட வாழ்வாதாராம் மேம்பட நிறைய புதுரக பயிர் திட்டங்கள் வகுத்தேன். இதுக்குத்தான் விருது. என் முயற்சிகளை அங்கீகரிச்ச அரசாங்கம்... அந்த புராஜெக்ட்டை இப்போ செயல்படுத்த ஆரம்பிச்சிருக்கு. அரியலூரை சேர்ந்த விவசாயிகள் சுமார் 500 ஹெக்டேர் பரப்பளவுல முந்திரி நெருக்கு நடவு விவசாயம் பண்றதுக்கு மானியமும் கொடுத்திருக்கு அரசு!''
டாக்டர் கெசி செல்வா விஜிலா (முதல்வர், கிறிஸ்டியன் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்):
''பி.ஈ., எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, எம்.ஈ., அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ் படிச்சேன். உதவிப் பேராசிரியர் வேலை, கல்யாணம், கணவர், குழந்தைகள்னு வாழ்க்கை நகர்ந்துச்சு. இதுல என் பிரசவம்தான், ஆராய்ச்சிக்கான விதையை எனக்குக் கொடுத்துச்சு.
'சிசேரியன் பிரசவங்கள் ஏன் அதிகரிக்குது?’ங்கற கேள்விக்கு, 'கர்ப்பிணி வயித்துல இருக்கற சிசுவோட இதய சிக்னலை (சின்ன ஸ்கிரீனில் சென்செக்ஸ் குறியீடு மாதிரி மேலும் கீழும் இறங்கித் தெரிவது) தனியா பிரிச்செடுத்து, அதை வெச்சு சிசுவோட உடல் நிலையைத் தெரிஞ்சுக்கறதுதான் பொதுவான நடைமுறை. இப்படி எடுக்கறப்போ தாயோட சிக்னலும் சேர்ந்து வரும்ங்கிறதால, சிசுவோட உடல் நிலையை சரியா கணிக்க முடியாது. அதனாலயும் சிசேரியன் நிலை ஏற்படுது'னு சொன்னாங்க. இதையே சவாலா எடுத்துக்கிட்டு, சிசுவோட சிக்னலை தனியா பிரிச்சு, சிசுவோட வளர்ச்சி, இதய குழாய் அடைப்பு எல்லாத்தையும் துல்லியமா கண்டுபிடிக்கற ஆராய்ச்சியில நான் ஜெயிச்சதுக்குத்தான் இந்த விருது!''
டாக்டர் ஜோதிமணி (உதவிப் பேராசிரியர், வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவை):
''ஈரோடு மாவட்டம், சாலைப்புதூர்தான் பூர்விகம். விவசாயக் குடும்பம். பி.எஸ்சி. விவசாயம் படிச்சுட்டு, எம்.எஸ்.சி, பி.ஹெச்.டி எல்லாம் சூற்றுச்சுழல் பத்தி படிச்சேன். 'ஆலையில இருந்து வர்ற திடக்கழிவுகள், சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடா இருக்கு. அதை விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியுமா?’ங்கறதுதான் என்னோட பிஹெச்.டி. ஆராய்ச்சி. கழிவுகளை சில நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி மட்க வெச்சு, பயிர்களுக்கு உரமா பயன்படுத்தலாம்ங்கறதை பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு நிரூபிச்சிருக்கேன்! அடுத்ததா, மத்திய அரசின் நிதியுதவியோட மனிதக் கழிவுகளை மேம்படுத்தி, உரமாக்கற ஆராய்ச்சி, நிலத்தடிநீர் மாசுபடுறதைக் கட்டுப்படுத்துற ஆராய்ச்சினு தீவிரமா இருக்கேன். சீக்கிரமே தீர்வுகளோட வருவேன்!''
டாக்டர் ஹேன்னா ரேச்சல் வசந்தி (இணைப்பேராசிரியர், மத்தியப் பல்கலைக்கழகம், புதுச்சேரி):
''பி.எஸ்சி., எம்.எஸ்சி., பயோ கெமிஸ்ட்ரி எல்லாம் படிச்சது... சென்னை, பாரதி பெண்கள் அரசு கல்லூரியில. அடுத்ததா, பிட்ஸ் பிலானியில எம்.ஃபில். கார்டியாக் சயின்ஸ் படிச்சேன்.
இதுதவிர, ராமச்சந்திரா மருத்துவமனையோட டாக்டர் தணிகாசலம் வழிகாட்டுதல்களோட சித்த மருந்துகள், கொலஸ்ட்ராலை எந்தளவுக்குக் கட்டுப்படுத்துகிறது என்கின்ற ஆராய்ச்சிகள்ல இறங்கி வேலை பார்த்தேன். சித்தாவைப் பொறுத்தவரைக்கும் நம்முடைய முன்னோர்கள் பல அரிய மருந்துகளைக் கண்டுபிடிச்சு வெச்சிருந்தாலும், சரியா டாக்குமென்ட் செய்யல. காலப்போக்குல கலவை விகிதம் சரியா அமையாததால, சரியான ரிசல்ட் கிடைக்கல. இதனாலயே, 'இந்திய பாரம்பரிய மருந்துகள் டாக்ஸிக் (விஷத்தன்மை) கலந்தது'னு ஒரு கருத்து வெளிநாடுகள்ல உருவாயிடுச்சு. இந்த நிலையை மாத்தறதுக்கான செயல்பாடுகள்ல இறங்கினேன்.
முன்னோர்களோட மூலிகை மருத்துவத்தைப் பின்பற்றி மாத்திரை, மருந்துகள் தயாரிக்கறப்போ மருந்துக் கலவைகளோட சதவிகிதம் எந்தந்த அளவுல இருக் கணும்ங்கிறதை பலகட்ட ஆராய்ச்சிகள் மூலமா கடந்த பத்து வருஷமா கண்டறிஞ்சுட்டு வர்றேன். எல்லாத்தையும் டாக்குமென்டேஷனும் செய்றேன். இந்த அக்கறையும், ஆர்வமும்தான் விருதுக்கு காரணம்!''
சுஜாதா கபிலன் (சீனியர் பேராசிரியர், காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை): ''இன்னிக்கு உலகத்தை அச்சுறுத்திக்கிட்டு இருக்கிற விஷயம், புவிவெப்ப
மயமாதல். இதுக்கு முக்கிய காரணம், மட்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக். இதை ஒழிக்க ஆயிரம் கோஷங்கள் போட்டாலும், பிராக்டிகலா வொர்க் அவுட் ஆகல. அதனால, பிளாஸ்டிக்குக்கு சமமான, அதேசமயம் மட்கும் தன்மையுடைய ஒரு பொருளைக் கண்டுபிடிக் கறதையே பிஹெச்.டி-யோட டாபிக்கா எடுத்துக்கிட்டேன்.
சூடோமோனாஸ் பாக்டீரியாவில இருந்து மட்கக் கூடிய பிளாஸ்டிக் தயாரிக்கறதுக்கான மூலப்பொருளை எடுக்கலாம்னு ஆய்வுல சமர்பிச்சேன். கார்பன் மூலக்கூறுகள் அதிகம் இருக்கற அந்த பாக்டீரியாவுல இருந்து எடுக்கப்படற பாலிமர்கள், எளிதில் மட்கிப்போகக் கூடியவைங்கறதையும் நிரூபிச்சேன். மட்கக்கூடிய பிளாஸ்டிக், பொதுமக்கள் புழக்கத்துக்கு வர்றதுக்கு அரசாங்கத்தோட இந்த விருது பரிந்துரைக்கும்னு நம்பறேன்!''
ஜெய்தீப் மகேந்திரா (உதவிப் பேராசிரியர், மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி, சென்னை):

''
பிஹெச்.டி. ஆராய்ச்சி மூலமா மக்களோட கவனத்துக்கு வராத, ஒரு மருத்துவ உண்மையை வெளியில கொண்டு வரணும்னு நினைச்சேன். அப்படித்தான் 'ஈறு நோய்க்கும் இதய நோய்க்கும் தொடர்பு இருக்கிறதுங்கற டாபிக்கை தேர்ந்தெடுத்தேன். கிட்டதட்ட இருநூறு இருதய நோயாளிகளை சந்திச்சேன். பல நோயாளிகளை ஆய்வுக்கு உட்படுத்தினேன். ரத்தக்குழாயின் உட்புறம் லேசான படிமானங்கள் ஏற்படறதுக்கு, பல் மற்றும் ஈர்ல சேர்ற அழுக்குகளும் பிரதான காரணம். அதனால பற்களை சரியா பராமரிக்காததும் மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்ல ஒண்ணுங்கறதை ஸ்டடடி பண்ணி சமர்ப்பிச்சேன்.
'இந்தியாவிலேயே பல் மருத்துவத்துல முனைவர் பட்டம் வாங்கின முதல் பெண்ங்கற பெருமையும், அரசோட விருதும் கிடைச்சுருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.''
டாக்டர் மைதிலி (விஞ்ஞானி, ஃபிசிக்கல் மெட்டலார்ஜி டிவிஷன், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலையம், கல்பாக்கம்):
''திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துல எம்.எஸ்ஸி., ஃபிசிக்ஸ் படிச்சேன். சென்னைப் பல்கலைக்கழகத்துல பிஹெச்.டி. முடிச்சேன். கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்துலயே வேலைங்கறதால... அந்தத் துறையிலதான் என் ஆராய்ச்சி அமைஞ்சுது.
அணு உலைகள்ல துருவேறாத எஃகு, தூய டைட்டானியம்னு பயன்படுத்துறாங்க. அரிமானத்தை தடுக்கற தன்மை இதுல குறைவா இருக்கறதால, அந்தத் தன்மை இன்னும் அதிகமா இருக்கற ஒரு பொருளை உருவாக்குற ஆராய்ச்சியில என்னையும் இணைச்சுக்கிட்டேன். இதன்மூலமா டைட்டானியக் கலவையை இப்போ உருவாக்கி இருக்கோம். இதை, நீண்ட காலத்துக்குப் பயன்படுத்த முடியும். இது, சுற்றுச்சூழலுக்கு உகந்ததான வேக அணு ஈனுலைகளுக்கு ரொம்பவே பயனுள்ளதா இருக்கும்.
இப்ப கிடைச்சுருக்கற விருதை என்னோட முயற்சிக்கான பாராட்டாதான் நினைக்குறேன். மேற்கொண்டு, அணு உலைகளுக்குப் பயன்படக்கூடிய, உள்ளகப் பொருள் தொடர்பான ஆராய்ச்சியில இறங்கியிருக்கேன். அதை செய்து முடிக்கும்போது நிச்சயமா அது ஒரு சாதனையா இருக்கும்.''
சல்யூட்!

நன்றி : அவள் விகடன்

February 15, 2011

play school

 மித்து இந்த 1  ஆம் தேதியிலேர்ந்து play school போக ஆரம்பிச்சுட்டா ... முதல் ரெண்டு நாள் கொஞ்சம் அழுது என்னை தேடினால். ஆனா இப்போ எல்லாம் ஸ்கூல் போகணும்ன்னு சொன்னாலே ஒரே குஷி தான்.
இந்த ரெண்டு வாரத்திலேயே நிறைய மாற்றங்கள்
கோர்வையா பேச ஆரம்பிச்சுட்டா...
பெயர் சொல்லி கூப்பிட்ட உடனே திரும்பி பாக்குறா(முன்ன எல்லாம் குறைஞ்சது நாலு தடவை கூப்டா  தான் திரும்புவா )
ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்தும் நேரம் ஜாஸ்தி ஆகி இருக்கு ...
 
இப்டி சின்ன சின்னதா நிறைய மாற்றங்கள்
 
இது வரை நாம சொல்லி குடுத்ததை மட்டுமே பேசி செஞ்சுகிட்டு இருந்த குழந்தை இப்போ புதுசா நிறைய சொல்றப்போ,  செய்றப்போ நிஜம்மா மனசு நிறைஞ்சு போகுது