Pages

January 31, 2011

ரிமம்பர்டு மூமெண்ட்ஸ்

குழந்தைகளுடன் எவ்வளவு நேரம் கழித்தோம் என்பதை விட, அதை எப்படிக் கழித்தோம் என்பதே முக்கியம். ஒருவர், தான் ஒரு உதாரணமாக இருப்பதன் மூலம் கற்பிக்கலாம். குழந்தைகள் எதையும் கூர்ந்து கவனிக்க கூடியவர்கள். ஏதாவது ஒன்று பொய்யானது அல்லது நடிக்கப்படுவது என்றால், அதை உடனே கண்டுபிடித்து விடுவர். அவர்கள், உன்னை நம்பி மகிழ்கின்றனர் என்றால், மிக இளம் வயதிலேயே உங்களுடன் ஒத்துழைப்பர்.
என்னுடைய மூத்த மகன் ராஜிவ் குழந்தையாக இருந்தபோது, எப்போதும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே இருப்பான். எங்களுக்கு மிகவும் பழக்கமான அலகாபாத்தை விட்டுப் போகும் சமயத்திலேயே, ஒரு தம்பிப் பாப்பா (சஞ்சய்) பிறந்ததும், வேறு சில மாற்றங் களும், தற்காலிகமாக அவனைப் பாதித்தது. நான் உடல் நலமின்றி இருந்தேன். அவனுடைய ரகளைகள் அதிக எரிச்சலையூட்டின. திட்டு வதால் அது மேலும் மோசமாகியது. எனவே, நான் அறிவுப்பூர்வமாக முயன்றேன். நான் அதிகமாக அவனை நேசித்தாலும், அவனுடைய கூச்சல் என் அமைதியைக் கலைக்கிறது என்றேன். "நான் என்ன செய்யட்டும். நான் அடம் பண்ணவும், அடிக்கவும் விரும்பவில்லை. அது தானாக வருகிறது...' என்றான். குழந்தைகளின் விருப்பப்படி விட்டுவிடுவது உண்மையான அன்பன்று. தேவைப்படும் போது கற்பிப்பதும், கட்டுப்பாட்டை வளர்ப்பதும்தான் உண்மையான அன்பு. ராஜிவ் பனிரெண்டு வயதிற்குக் குறைவாக இருந்தபோது, ஓர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அறுவை சிகிச்சை மருத்துவர், "அது ஒன்றும் துன்பம் தராது...' என்று கூறச் சொன்னார். நான், இது குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு ஓர் இழுக்கு என்று கருதி, முதலில் அதிக வலியும், தொந்தரவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நாட்கள் இருக்கும் என்று விளக்கினேன். அவனுடைய துன்பத்தை நான் ஏற்றுக்கொள்ள இயன்றிருந்தால், நான் மகிழ்ச்சியோடு ஏற்றிருப் பேன். ஆனால், இது முடிய õததால், அவன் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றேன். அழுவதும், புகார் செய்வதும் தலைவலியைத்தான் உண்டாக்கும். ராஜிவ் புன்முறுவலுடன் பொறுத்துக் கொண்டான். "வயதானவர்களில் கூட இவனைப்
போல் ஒரு நல்ல நோயாளி எனக்கு இருந்ததில்லை...' என்றார் மருத்துவர்.
— இந்திரா காந்தி தன், "ரிமம்பர்டு மூமெண்ட்ஸ்' என்ற சுயசரிதை நூலிலிருந்து...

January 25, 2011

தமிழ்நாட்டு பள்ளி கல்வி முறை

இப்போ தமிழ் நாட்ல நல்ல வருமானம் தருகிற தொழில்னா அது  தனியார் பள்ளி துறை தான் . அந்த அளவுக்கு பள்ளிகளின் எண்ணிகையும், கட்டணமும் உயர்ந்து ,தரம் அதல பாதளத்துக்கு போய்கிட்டு இருக்கு...
தமிழக பள்ளிகளை  அதன் பாடத்திட்டங்கள் அடிப்படையில் பிரிக்கலாம்
1 . Metriculation /மாநில கல்வி பாட  திட்டங்கள் ( State  Board ) -தமிழக அரசால் நடத்தபடுவது 
2 .CBSC ( Central Board of School Education )எனப்படும் மத்திய அரசாங்கத்தால்  நடத்தபடுவது
 
இதை தவிர
 
3 .இந்திய ஆங்கில கலப்பு கல்வி முறை 
4 .ISCE எனப்படும் Indian School Certificate முறை ....
ஹப்பா இப்போவே கண்ணை  கட்டுதே....

BPA Free

 இப்போதெல்லாம் குழந்தைகளுக்கான தண்ணீர் பாட்டில்களில் BPA  Free  என்னும் அடையாளங்களை பார்க்கலாம் .
என்ன இந்த BPA ?
BPA  எனப்படும் bisphenol A  வேதிப்பொருள் கடினமான பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்,மழலையர்களுக்கான பீடிங் பாட்டில், தண்ணீர் பாட்டில் ஆகியவை தயாரிக்க உபயோகப்படுகின்றது . மேலும் இந்த BPA நஞ்சு பல்மருத்துவத்தில் பயன்படும் கூட்டுப்பொருள்களிலும், உணவையும் பானங்களையும் அடைக்கப் பயன்படும் அலுமினியக் குப்பிகளின் உட்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது.
 
இதுக்கு இப்போ என்னனு கேக்குறீங்களா?
 
இந்த பாட்டில்லே  தண்ணீ குடிக்கிறதால குழந்தைகளுக்கு அதிலும் பாட்டில் நிறைய பயன்படுத்தும் பள்ளி குழந்தைகளுக்கு இரத்த சம்பந்தமான மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான சத்திய கூறுகளை அதிகபடுத்துது.
அது மட்டும் இல்லாம இப்போ குழந்தைகளிடையே ஒரு பெரிய பிரச்சனையான "Obesity " கிற உடல் எடை பிரசையும் இதனால அதிகரிக்கும்  அப்டின்னு 2008  ல நடந்த ஆய்வுல கண்டுபிடிச்சு  இருக்காங்க.
அது மட்டும் இல்லாம 2010  ல Tufts University Medical School  ல நடந்த ஆய்வின் படி இந்த BPA  புற்று நோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கிதாம் ...
 
அதுனால இனிமே குழந்தைக்கு  பாட்டில்  வாங்கும் போது பாட்டில் பின்னாடி  ஒரு முக்கோணத்துல போட்டு இருக்கிற நம்பர் பாத்து வாங்கணும்.
 
 
3 ,7  -BPA கண்டிப்பாக இருக்கும் -தவிர்க்கவும் 
1 ,2 , 4 ,5  மற்றும் 6  எண் கொண்ட பாட்டில்கள் வாங்க தகுதியானவை ...   

January 20, 2011

ரா. கி. ரங்கராஜன்

 ரா. கி. ரங்கராஜன் அவர்களின் "காதல் கதைகள்"  புத்தகம் படித்தேன். காதலை கூட இத்தனை விதமாக இத்தனை  நகைச்சுவையாக சொல்ல முடியும் என்பதற்கு அழகான உதாரணம் ... அதுவும் "விஸ்கி ஒரு பெக்",கோவாச்சி போன்ற கதைகள் நம்மை சுற்றி நம்மை அறியாமலே நடந்து கொண்டு இருக்கும் உண்மை சம்பவங்களின் பிரதிபலிப்பு ....
இவரது "ட்விஸ்ட் கதைகள்" ," கண்ணா பின்னா  கதைகள்" எல்லாமே வெகு அற்புதம் ...  

January 13, 2011

நுனிப்புல் மேய்ந்த கதை-2010

 2010 வலையுலகம் மூலம் நிறைய தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது . அதே போல நிறைய நண்பர்களும்  அறிமுகம் ஆனார்கள்...
போன வருடம் முழுதும் நான் மேய்ந்ததில்  சிலவற்றை அசை போடுகிறேன்  
என் அம்மு வுக்காக நிறைய தேடி தேடி படித்தேன் . அதில் எனக்கு  பிடித்த சில
1 . பேரெண்ட்ஸ் கிளப் - இது என்னை போன்ற இளம் தாய்மார்களுக்கு மிக உபயோகமான வலை பூ.. அதிலும் புதுகை தென்றல்  அவர்களின் குழந்தை வளர்ப்பு குறிப்புக்கள் ரொம்ப நல்லா இருக்கு...  http://parentsclub08.blogspot.com/
 
2 .http://www.montessorimom.com/- நாலைந்து வருடங்களாகவே எனக்கு Montissori  முறை கல்வி மீது ஆர்வம் இருந்தது . அவ்வபோது படிப்பதும் தெரிந்து கொள்வதுமாக  இருந்த எனக்கு இந்த தளம் மிக பிடித்தது... வீட்டிலேயே குழந்தைகளை பழகும் முறைகளை பற்றியும் , சில விளையாட்டு முறைகளும் நன்றாக இருக்கின்றன
 
3 .babycenter : இந்த தளம் என் கர்ப்ப காலத்திலேர்ந்தே எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்து இருக்கிறது. கர்ப்பம் உறுதி ஆனவுடன் முதல்ல செஞ்ச வேலை இந்த தலத்தில் சேர்ந்தது தான் . இதில் காட்டி உள்ள படங்கள்/விஷயங்கள்  நிஜமாவே நம் கருவின் வளர்ச்சியை கண் முன்னே காட்டும் .
 
4 .. எனக்கு முதல் முதல் அறிமுகமான வலை பூ -http://ammakalinpathivukal.blogspot.com/   நிறைய அம்மாக்களின் சொந்த கதை, நொந்த கதை எல்லாம் ரொம்ப சுவாரசியம் .... தெரிந்து கொள்ளவும்  நிறைய..... 
 
5 .    அப்புறம் என் சமையல்அறையை சுவை மிக்கதாகிய முக்கிய தளம் 
அறுசுவை.காம்   - சமையல் குறிப்புகள் மட்டும் அல்ல .. அழகு குறிப்புக்கள் , கைவினை  கதைகள்  இப்படி நல்ல விஷயங்கள் நிறைய இருக்கு
 
6 . என்னுடைய முக்கியமான பொழுது போக்கு பாட்டு கேட்பது , அதுவும் கொஞ்சம் பழைய பாட்டு , கிராமிய பாட்டு ன்னா ரொம்ப இஷ்டம் ...அதுனால இந்த வலை பூ என்னை ரொம்பவே கவர்ந்தது ..அதுவும் இல்லாம நான் ரொம்ப நாளா தேடிகிட்டு இருந்த சில பட்டுகளை இதுல பார்த்தப்போ ரொம்ப ................ சந்தோஷமா இருந்துச்சு  .http://moganaraagam.blogspot.com/
 
7 .  எனக்கு பாலகுமாரன் எழுத்துக்கள் அறிமுகம் ஆனது நன் கல்லூரி படிக்கும் போது. அதன் பின் நிறைய கதைகள் படித்து விட்டேன் .. அவருடைய நிறைய கருத்துக்கள் நிஜமாகவே மனதில் ஆணி அடித்தது போல் பதிந்து கிடக்கின்றன ..." மெர்குரி பூக்களும் " , இரும்பு குதிரைகளும் ,திருமணம் ஆன என் தோழிக்கும் என்னுள் அளித்த மாற்றங்கள்  பல பல ... அவரின் கருத்துக்கள் அடங்கிய வலை பூ இது
 
 8 .அப்புறம் முல்லையின் சித்திரகூடம் (பெயரை போல கருத்துக்களும் புதுமை ),Dr .ராஜ்மோகன் அவர்களின் குழந்தை நலம் ,Dr .ருத்ரன் அவர்களின் வலை பூ, Dr . ஷாலினி அவர்களின் வலை பூ,வால் பையன்(இவரது பெயரில் உள்ள குறும்புத்தனம் எழுத்துகளிலும் ...)  .. இப்படி என்னை ஈர்த்தவர்கள் ஏராளம் ....
 
9 .   அப்புறம் இந்த வருஷம் தான் என் செல்ல மிதுக்காக நானே ஆரம்பித்த இந்த வலை பூ .... 
 
இன்னும் பிடித்த தளங்களும் , வலை பூக்களும் நிறைய  இருக்கின்றன..மீண்டும் ஒரு முறை எழுதுகிறேன் ..... 
 

January 10, 2011

பிள்ளையார்

நான் முதல் வகுப்பு சேந்தப்போ அக்கா எனக்கு முதல் முதல்ல சொல்லி தந்த பாட்டு இது ....
எப்போ எங்க பிள்ளையார் பார்த்தாலும் கொழுக்கட்டையும் ,இன்னும் நல்ல தமிழ் படிக்கணும்கிற ஆசையும் இந்த பாட்டு தரும்
 
பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் -கோலஞ்செய்
துங்கக் கரி முகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
 
மிதுக்கு சீக்கிரம் இந்த பாட்டு சொல்லி தரனும்ன்னு நினைச்சுட்டு இருக்கேன் . இப்போ தன அவ சாமி முன்னால ஓம் ன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கா  

January 9, 2011

ஈசி உருளை கிழங்கு சப்ஜி

 ஈசி உருளை கிழங்கு சப்ஜி
உருளை கிழங்கு -1 /4  கிலோ
சோம்பு தூள்- 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம்-1
தக்காளி- 1
கொத்துமல்லி -1  கைப்பிடி  
பச்சை மிளகாய் -2
மிளகாய்  தூள்- காரத்துக்கு ஏற்ப 
தாளிக்க:
எண்ணை
கடுகு
சீரகம்
கறிவேப்பிலை - 1 கீற்று
செய்முறை:
1 .உருளை கிழங்கை நன்கு வேக வைத்து சிறு சிறு துண்டாக வருமாறு    மசித்து கொள்ளவும் .
2  வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் ,கறிவேப்பிலை தாளிக்கவும்
3 . கீறிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம்  போட்டு,நன்கு வதக்கி பின்  தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
4 . பிறகு மசித்த கிழங்கை போட்டு சிறிது நீர் ஊற்றி நன்றாக கிளறி பின் சோம்பு தூளை சேர்க்கவும் .
5  சோம்பின் பச்சை வாசனை போகும் படி வதக்கி பின் உப்பு சேர்த்து தேவை ஆனால் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
6  பின் தேவை ஆன அளவு நீர் சேர்த்து மூடி வைத்து 5  நிமிடம் போல் அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும் .  
7 . கிரேவி கெட்டி ஆனவுடன் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய மல்லி தழை சேர்த்து பரிமாறலாம் .
மிகவும் சுலபமாக செய்யும் இந்த கிரேவி எனக்கு அவசரத்தில் கை கொடுக்கும் . இதை califlower கொண்டும் செய்யலாம் . சப்பாத்தி மற்றும் பரத்தாக்கு ஏற்றது

என் சமையல் அறையில்

என் சமையல் அறையில் நான் படர பாட்டை இங்கே எழுத போறேன் .
கல்யாணத்துக்கு முன்னாடி   வரைக்கும் ஒரு முழு சாப்பாடு சமைச்சதே கிடையாது . சின்ன சின்ன உதவிகள்    செய்றதோட   சரி. ஆனா எப்டி சமைக்கணும் என் பிரெண்ட்ஸ் கேட்டா என்னவோ நானே சமைச்ச மாதிரி நல்லா சொல்லுவேன்  . நமக்கு  வாய் தானே  சொத்து ....?
அம்மா ரொம்ப விதம் விதமா எல்லாம் சமைக்க மாட்டாங்க ..ஆனா நல்லா சமைப்பாங்க , காய்கறி , கீரை எல்லாம் நிறைய செய்வாங்க ...அதனால அம்மா சமையல் எப்பவுமே போர் அடிச்சது கிடையாது. அதுவும் வத்தல் குழம்பு , கறி குழம்பு,குருமா  எல்லாம் ரொம்ப இஷ்டம் .  
கல்யாணத்துக்கு  அப்புறம் உடனே சிங்கப்பூர் வந்துட்டதாலே போன்ல  குறிப்பு கேக்குற பழக்கம் எல்லாம் இல்லை .. நானே தட்டு தடுமாறி  கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டேன் . ஆரம்பத்துல சமையல் அவ்ளோ இஷ்டம் இல்லாத வேலை தான் ... ஆன  போக  போக   ரொம்ப புடிச்சி போச்சு .. இப்போ எல்லாம் எந்த நண்பர்களை பார்த்தாலும் கண்டிப்பா அவங்க சமையல் குறிப்புக்கள் கேட்காம விடறது இல்லை .
அதுனால இப்போ  யாரையாவது வீட்டுக்கு சாப்ட வாங்க ன்னு தைரியமா கூப்புடுற அளவுக்கு முன்னேறி  இருக்கேன்.
அதுல வந்த துணிச்சல் தான் இப்டி என்னை பதிவ எழுத வைக்கிது.... 
என் முதல் குறிப்பு All  time  favorite Potato  தான்  ...அடுத்த பதிவில் படிச்சு ருசியுங்க
 
பி.கு : புது வருஷத்தின் முதல் போஸ்ட்