Pages

January 9, 2011

என் சமையல் அறையில்

என் சமையல் அறையில் நான் படர பாட்டை இங்கே எழுத போறேன் .
கல்யாணத்துக்கு முன்னாடி   வரைக்கும் ஒரு முழு சாப்பாடு சமைச்சதே கிடையாது . சின்ன சின்ன உதவிகள்    செய்றதோட   சரி. ஆனா எப்டி சமைக்கணும் என் பிரெண்ட்ஸ் கேட்டா என்னவோ நானே சமைச்ச மாதிரி நல்லா சொல்லுவேன்  . நமக்கு  வாய் தானே  சொத்து ....?
அம்மா ரொம்ப விதம் விதமா எல்லாம் சமைக்க மாட்டாங்க ..ஆனா நல்லா சமைப்பாங்க , காய்கறி , கீரை எல்லாம் நிறைய செய்வாங்க ...அதனால அம்மா சமையல் எப்பவுமே போர் அடிச்சது கிடையாது. அதுவும் வத்தல் குழம்பு , கறி குழம்பு,குருமா  எல்லாம் ரொம்ப இஷ்டம் .  
கல்யாணத்துக்கு  அப்புறம் உடனே சிங்கப்பூர் வந்துட்டதாலே போன்ல  குறிப்பு கேக்குற பழக்கம் எல்லாம் இல்லை .. நானே தட்டு தடுமாறி  கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டேன் . ஆரம்பத்துல சமையல் அவ்ளோ இஷ்டம் இல்லாத வேலை தான் ... ஆன  போக  போக   ரொம்ப புடிச்சி போச்சு .. இப்போ எல்லாம் எந்த நண்பர்களை பார்த்தாலும் கண்டிப்பா அவங்க சமையல் குறிப்புக்கள் கேட்காம விடறது இல்லை .
அதுனால இப்போ  யாரையாவது வீட்டுக்கு சாப்ட வாங்க ன்னு தைரியமா கூப்புடுற அளவுக்கு முன்னேறி  இருக்கேன்.
அதுல வந்த துணிச்சல் தான் இப்டி என்னை பதிவ எழுத வைக்கிது.... 
என் முதல் குறிப்பு All  time  favorite Potato  தான்  ...அடுத்த பதிவில் படிச்சு ருசியுங்க
 
பி.கு : புது வருஷத்தின் முதல் போஸ்ட்

1 comment:

  1. எல்லா இடுகையையும் வாசிச்சேன். அருமையா இருக்க்கு. தொடருங்கள்..

    ReplyDelete