Pages

June 11, 2012

முத்து மணி மாலை...

 ரொம்ப நாளாவே தையல் கலையிலும் , செயற்கை நகைகள் செய்வதிலும் இருந்த ஆர்வத்தை செயல் படுத்தி பார்க்கும் வேகம் இந்த வாரம் கொஞ்சம் நிறையவே இருந்தது , அதுவும் இங்கே BTM  வேடு மாறியதும் , ஒரு கடையை வேறு பாத்து வச்சிருந்தேன் ,  நகைகள் செய்ய , உடை அலங்காரம் செய்ய தேவையான பொருட்கள் கிடைக்கும் கடை அது ,
வெள்ளி கிழமை சிவா வர தாமதம் ஆகும் என்று தெரிந்த வுடனே , வலையில் இருந்து , ஏற்கனவே எடுத்து வைத்திருந்த தேவையான பொருட்கள் லிஸ்ட் எடுத்துட்டு மித்ரவோட கிளம்பியாச்சு ..
கடைக்கு போய் எல்லாத்தையும் வாங்கிட்டும்   வந்தாச்சி
 , மித்ரா 10 .30 க்கு தூங்கிட்டா
 அதுக்கு அப்புறம் எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கிட்டு , முதல்ல மணி கோர்க்கலாம்ன்னு முடிவு பண்ணி ஆரம்பிச்சுட்டேன் .
முதல் பிரச்னை , அந்த வயரில் அவ்ளோ சின்ன மணி கோக்குறது .. இவ்ளோ நேரம் இதனை கூர்மையான பார்வையோடு உட்கார்ந்து ரொம்ப நாள் ஆச்சு ... கொஞ்சம் கண் வலி , கொஞ்சம் முதுகு வலி .. எல்லாம்  கோர்த்து முடிச்ச அந்த அழகான மணியை பார்த்தவுடனே  பறந்து போச்சு ...
அப்புறம் சின்னதாய் ஒரு தோடு , அந்த மணிக்கு பொருத்தமாய் ...
செய்து முடிக்கவும் , மித்ரா bathrrom  போக விழிக்கவும் சரியாய்  இருந்துச்சு .. தூக்கத்திலேயே  அந்த மணியை பார்த்ததும் , அவளுக்கு பயங்கர  சந்தோசம், எனக்கம்மா . எனக்கம்மா அப்டின்னு நாலஞ்சு தடவை கேட்டாச்சு .. சரிடா.. காலையில எழுந்து குளிச்சிட்டு போட்டுக்கலாம்னு சொல்லி தூங்க வெச்சிட்டேன் ..
காலையில எழுந்து முதல் வேலையா அவள் கேட்டது , அம்மா எனக்கு மணி போட்டு விடம்மா ..

ஹப்பா இந்த சந்தொஷதுக்காவது  அடிக்கடி ஏதாவது செய்யணும்னு தோணுது ..
சனி, ஞாயிறு ரெண்டு நாள்  அந்த மணியை பாப்பா கழட்டவே இல்லை ...

No comments:

Post a Comment