Pages

November 3, 2011

வேலை கிடைச்சிடுச்சு......................

வேலை தேடும் படலம் ஆரம்பிச்சு இன்னையோட 16 நாள் ஆச்சு. கிட்டத்தட்ட வேலை கிடைச்சிடுச்சு... (உத்தரவு கடிதத்திற்காக காத்திருக்கிறேன் ) .. ஆனா இனி வரும் நாள்கள் நினைச்சா கொஞ்சம் பயம்மா இருக்கு .. எப்டி மித்தா என்னை விட்டுட்டு 8 + மணி நேரங்கள் இருக்க போறா? அதை விட நான் எப்டி இருக்க போகிறேன் ?


இனி அடுத்த கட்ட வேலைகள் .. ஏற்கனேவே வேலைக்கு வந்த பொண்ணு சொல்லாம போய்டுச்சு ... இனி அடுத்த ஆள் தேடனும் .. பப்புக்கு நல்ல பள்ளிக்கூடம் தேடனும் ... அதை பொறுத்து வீடு மாத்தனும். .இப்போவே கண்ணை கட்டுதே ...

ஆரம்பத்தில் அம்மா ஆபீஸ் போகட்டுமான்னு பப்பு கிட்ட கேட்ட " ம் போ வேணாம் " அப்டின்னு சிணுங்குவா.. இப்போ கொஞ்சம் பரவ இல்லை .. அம்மா ஆபீஸ் போய் சீக்கிரம் வந்துடு ன்னு சொல்ற அளவுக்கு புரிஞ்சுகிட்டா ..

Telephonic interviews ஆப்போ பப்பு ரொம்ப சமத்தா இருந்தா.. எந்த விஷயத்தையும் அவளுக்கு புரியற மாதிரி ஒன்னுக்கு ரெண்டு தடவை சொன்ன ரொம்பவே ஒத்துழைகிரா ...

No comments:

Post a Comment