Pages

November 12, 2011

மித்ரா @ Schooby Dhoobie & அம்மா @ CALSOFTLABS

சிங்கபூர்லேர்ந்து வந்து மூணு மாசம் ஆச்சு. இங்க வந்ததுலேர்ந்து மித்ரா ஸ்கூல் போலாம்ன்னு சொல்லிட்டே இருந்தா...
 
வேலைக்கு போகணும் ன்னு முடிவு பண்ணதுமே பாப்பா கிட்ட சொல்ல ஆரம்பிச்சுட்டேன் ... அம்மா வேலைக்கு போனா சாயந்திரம் தான் வருவேன் .. பாப்பா ஸ்கூல் போய்ட்டு வந்து சமத்தா விளைடிட்டு , தூங்கி எழுந்தா அம்மா வந்தேடுவேன் .. அப்படின்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பேன் .. சில சமயம் சரி சொல்லுவா .. ஆனா நிறைய தடவை வேணாம் போ ன்னு தான் சொல்லிவா...

போன வாரம் தான் வேலை கிடைச்சது .


இப்போதைக்கு வீடு மாற வேணாம் ன்னு முடிவு பண்ணி பக்கத்துலேயே play ஸ்கூல் போய் பாத்துட்டு வந்தோம் . ஓரளவிற்கு நல்லாவே இருந்துச்சி ..
சரி ன்னு செவ்வாய் கிழமை போய் பணம் கட்டிட்டு வந்தேன் ..

புதன் கிழமை நல்லா தான் விடிஞ்சுது .. பால் குடிச்சு , புது டிரஸ் போட்டு , bag மாட்டி கிளம்பிட்டா ...

ஸ்கூல் வாசல் போனவுடனே மேடம் க்கு மனசு மாறிடுச்சு .. அம்மா ஸ்கூல் வேணாம் ம்மா ன்னு ஒரே அடம் .. ஒரு வழியா பேசி பேசி .. நான் வெளியவே உட்கார்ந்து இருக்கேன் ன்னு சத்தியம்  எல்லாம் பண்ணி .. உள்ள அனுப்பினா ... பத்தாவது நிமிஷம் பயங்கர அழுகை ...

வேற வழி இல்லாம சீக்கிரம் கூட்டிட்டு வந்தேன் ...

வியாழகிழமை ..................

எல்லாம் ரெடி .. ஸ்கூல் போய் அழ மாட்டேன் ன்னு திருப்பி திருப்பி சொல்லிகிட்டே வந்தா.. ஆனா வாசல் போனவுடனே அம்மா போகாதே போகாதே ன்னு அழுகை .. மனசை தேத்திட்டு வெளிய வந்துட்டேன் .. அரை மணி நேரம் கழிச்சு போய் பாத்தா ஒரு மாதிரி வேடிக்கை பாக்க ஆரம்பிச்சு இருந்தா ...1 மணி நேரம் கழிச்சு அவங்களே இன்னைக்கு போதும் ன்னு போக சொல்லிட்டாங்க ..

வெளிய வந்தவ வீர நடை போட்டு எனக்கு முன்னாடி நடக்க ஆரம்பிச்சுட்டா.


அம்மா ... அம்மா....

சொல்லுடா..

நீ ஆபீஸ் போக போறியா?

ஆமாம் செல்லம்மா ...

ம் போ போ .. நான் ஸ்கூல் போறேன் .. நீ ஆபீஸ் போ .. அடம் பண்ண மாட்டேன் ..


வெள்ளிகிழமை ....

சீக்கிரம் எழுந்து மதியத்துக்கு சமச்சி வெச்சுட்டு பாப்பாவை ரெடி பண்ணியாச்சு ... மனசுக்குள்ள ஒரே பயம் .. எப்படி என்னை விட்டிட்டு 7 /8 மணி நேரம் இருக்க போறா?...

ஸ்கூல் போகும் போதே பயங்கர அழுகை .. அவங்க அப்பா லீவ் போட்டு கூட இருக்கிற தெம்பில் கிளம்பியாச்சு ...

10 .30 :

சிவா பாப்பா அழுறாளா?

வீட்டுல இருக்கேன் . ஸ்கூல் போய் பாக்குறேன் ..

மனசுக்குள்ள பக் பக் ...

11 .00

ஸ்கூல் போனா , என் கூடவே வந்துட்டா..

அழழையா?

இல்லை .. இரு பேச சொல்றேன் ...

....

..

அம்மா ..

கன்னுக்குட்டி ..

அம்மா ஆபீஸ் போய்டியா?

ஆமாம் டா..

சரி ம்மா .. சீக்கிரம் வந்துடு ...


ஹப்பா.. அந்த நிமிஷம் மனசுக்குல வந்த சந்தோசம் வார்த்தையால சொல்ல முடியாது


சாயந்தரம் குள்ள 3 தடவை போன்ல பேசினேன் ... ஒரு சின்ன அடம் , அழுகை கூட இல்லை ..

இந்த வயதில் எப்படி வந்தது இத்தனை புரிதல் ?....


திங்கள் கிழமை ..

நினைக்கவே பயம்மா  தான் இருக்கு ... நாங்க ரெண்டு பேரும் இல்லாம ஆயா கூட எப்டி இருக்கா போறா?

No comments:

Post a Comment