Pages

September 9, 2012

சலங்கை இட்டாள் ஒரு மாது



மித்ரா விற்கு வியாழன் அன்று அவளுடைய நடன பள்ளியில் சலங்கை குடுத்தார்கள் , வகுப்பில் சேர்க்கும் போதே சீக்கிரம் குழந்தைகல்லு சலங்கை குடுத்து விடுவோம்ன்னு அவர் ஆசிரியை சொன்னார். அதற்கான காரணமும் எனக்கு பிடித்து இருந்தது ... அந்த சலங்கையில் ஒலியே குழந்தைகளுக்கு ஆர்வத்தையும் , பயிற்சி எடுக்கும் போது கவனத்தையும் கொடுக்கும்   என்பது  தான் அது ...
பழக ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளே மித்ரா என்னாகும் சலகை வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து விட்டால் . வகுப்பில் எல்லாரும் கட்டி ஆடும் போது அவளுக்கும் ஆசை வரத்தானே செய்யும்.. போன வாரம் ரொம்ப கேட்டு அடம் பண்ண ஆரம்பிச்சுட்டா .. ஆன்டி கிட்ட கேட்டால் , அவள் அளவு சலங்கை வந்துடுச்சு வந்து வாங்கிகோங்க அப்டின்னு சொன்னங்க .. வியாழன் அன்று நானும் மித்ரா கூட வகுப்புக்கு போய் பணம் குடுத்து சலங்கை வாங்கிட்டேன் .
அதை அவர்களே பூஜையில் வைத்து மித்ரா கையால் எடுக்க சொல்லி அவங்களே கட்டி விட்டாங்க ... அந்த நிமிஷம் மித்ராவின் மன நிலை எப்படி இருந்திருக்குமோ தெரியலை .. ஆனால் நான் , சந்தோஷத்தின் எல்லையில் தான் இருந்தேன் ... என் சிறு வயசு ஆசை , ஏக்கம் எல்லாமே இன்று என் கண் முன்னால் நிறைவேறியது ..
 இனி , அவளை அந்த ஆர்வத்தில் இருந்து திசை திருப்பாமல் , வளர்க்க வேண்டிய பொறுப்பு அதிகரித்து உள்ளது ...

 

No comments:

Post a Comment