Pages

August 1, 2013

அம்மா உங்கா.... வேணும்

மித்ரா  சூள்  கொண்ட போதே  , குழந்தை பிறந்த பின் வேலையை தொடர போவதில்லை என்று முடிவு செஞ்சாச்சு .. சிவாவிற்கும் என் முடிவில் திருப்தியே ...

மித்ரா பிறந்து என் கையில் கொடுத்தவுடன் நான் அவளிடம் முதலில் பேசியது , சொன்னது .. "you  are my best friend Chellam " அன்றிலிருது இதோ நாலரை வயது வரை அப்படியே நடந்தும் , நடத்தியும் வருகிறேன் ..

அவள் பிறந்து 2 மணி நேரம் கழித்தே நான் என் அறைக்கு வர முடிந்தது .. அவள் முதன் முதலில் பால் உறிஞ்சிய அந்த மணி துளி இன்னும் என்னால் நினைத்து பார்க்க முடிகிறது ....

எல்லா மருத்துவ மனைகளிலும் செவிலியர்கள் வந்து தாய்க்கு குழந்தையை எப்படி பிடிக்கணும் , எப்படி பால் கொடுக்கணும் ன்னு  சொல்லி கொடுப்பாங்க ..
என்னை பொறுத்தவை ..தாயின் உள்ளுணர்வே அதை  சொல்லி கொடுத்து விடும் 

நல்ல உணவு , தாயின் மன நிலை இவை இரண்டும் தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் .. 

நம் பெரியவர்கள் , உண்ணும் உணவையே மருந்தை பார்த்தவர்கள் ..

பூண்டு , பால் சாதம் , கீரை , இவை எல்லாம் நான் அனுபவத்தில்  அறிந்து கொண்டது ..

மூன்று வேலையாக  சாப்பிடாமல் ஐந்து வேலையாக  சாப்பிடனும் 

பால் குடுக்க எந்த கால அளவும் கிடையாது , 
குழந்தை உரிவதை நிறுத்தி விட்டால் , வேறு பக்கம் மாற்றி பார்க்கலாம் , அப்போதும் உரியவில்லை என்றால் விட்டு விடலாம்

படுத்து கொண்டோ , தொலை /அலை பேசியில் பேசியில் பேசி கொண்டோ  பால் கொடுப்பதை தவிர்க்கவும் 
பால் கொடுக்கும் நேரம் மிக முக்கியமானது .. அதை  தாய்க்கும்  குழந்தைக்கும் நல்ல புரிதலை உருவாக்கும் நேரமாக பயன்படுத்துங்கள் , 

மித்ரா பிறந்த நாளில் இருந்தே , சொல்ல போனால் வயிற்றில் இருக்கும் போதே அவ கிட்ட பேசிக்கிட்டே இருப்பேன் ... பால் குடிக்கும் பொது  பாடுவேன் , கதை சொல்வேன் , இல்லை பொதுவாய் .. இன்னைக்கு என்ன சமைக்கலாம் ,அடுத்தது என்ன பண்றது , எங்க போகலாம் , இல்லை நண்பர்கள் , வேற குழந்தைகள் இப்படி எதாவது எனக்கும் அவளுக்கும் கேட்கும் படி பேசுவேன் ... 

 அதே போன்று நல்ல தூக்கத்தில் இதுவரை நான் பால் கொடுத்ததே இல்லை , இரவில் அவள் லேசை அசைந்தாலோ , சினுங்கினலோ , எழுந்து அவளை கையில் எடுக்கும் போதே  லேசாய் முழித்து விடுவாள் .. அந்த நேரத்தில் தான் கொடுத்து பழக்கம் .. 
 
 மித்ரா பிறந்தது முதலே , நிறைய வெளியில் கூட்டி கொண்டு போய்  பழக்கம் ...
வெளியே போகும் பொது முதல் 6 மாதம் , நமக்கு சாப்பிட எதாவது , பழம் ,ரொட்டி .. தண்ணீர்...அப்புறம் முக்கியமாய் நல்ல பெரிய துண்டு  அல்லது பருத்தி துப்பட்டா .. 
எங்கே இருக்கிறோம் என்று கவலை படாமல் ஓரளவு மறைவான இடத்தில பால் கொடுக்கலாம் 

நான் எனது தோழிகளுக்கு எல்லாம் சொல்வது ஒன்றே ஒன்று தான் ..
நாம் எப்போது வேண்டுமானாலும் , வேலைக்கு போகலாம் , பணம் சம்பாதிக்கலாம் ....
ஆனால்  குழந்தையின் முதல் ஒன்று , இரண்டு வருடங்கள் ரொம்ப ரொம்ப முக்கியம் .. அதுவும் தாய்பால் கொடுக்க வேண்டிய முதல் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை , தயவு செய்து குழந்தைக்காக  மற்ற எல்லாவற்றியும் தள்ளி போடுங்கள் ...

தாய் பால் ஒவ்வொரு குழந்தையின் உரிமை .... அதை தட்டி பறிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை ....
தோழர்களே .. உங்கள் மனைவி  , அக்கா , தங்கைகள்  தோழிகள்  தாய் பால் கொடுப்பதை ஊக்குவியுங்கள் ,ஆதரவாய்  இருங்கள் ..

தாய்மார்களே .. தாய் பால் கடவுள் கொடுத்த வரம் ... அதை சரியாய்  பயன்படுத்துங்கள்  
 




2 comments:

  1. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_19.html?showComment=1392782733232#c461818290231042950

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete