Pages

February 22, 2012

சந்தியாக்கு மாமி , எனக்கு அம்மா

சிங்கப்பூரில் இருக்கும் பொது மித்ராக்கு தெரிஞ்ச சொந்தங்கள் எல்லாம் அம்மா ,அப்பா ,அத்தை, மாமா ( என் மற்றும் அப்பாவின் நண்பர்கள் ) மட்டுமே .. இங்கே வந்த பின்னால், அதுவும் , அடிக்கடி திருவண்ணாமலை போய் வரும் வாய்ப்புகள் நிறையவே வந்து போனதால் , இப்போ கொனஜ்ம எல்லா சொந்தங்களும் பாப்பாக்கு நல்ல தெரியுது ,
 அதுவும் , என்னையும் , அவங்க அப்பவோயும் மற்ற எல்லாரும் எப்டி கூப்பிடுறாங்க அப்டின்னு தெரிஞ்சிகிறதுல மித்ராக்கு ஆர்வம் ஜாஸ்தி ... என் நாத்தனாரின் பெண்கள் என்னை மாமி ன்னு கூப்பிடுவாங்க ,ஆரம்பத்தில் மாமி சொல்லாதே அம்மா சொல்லு ன்னு ரொம்ப சண்டை போடுவா.. அப்புறம் எனக்கு அம்மா , சந்தியாக்கு மாமி ன்னு கொஞ்சம் இரவு முறைகள் புரிய ஆரம்பிச்சிடுச்சு ..
இப்போ வீட்ல இதை வச்சி தான் விளையாடுறோம் ...
சந்தியாக்கு நான் யாரு ?
நந்துக்கு மித்ரா அப்பா என்ன வேணும் ? இப்டி தான் ,
 இப்போ இன்னும் கொஞ்சம் முன்னேறி  இருக்கோம் ..
நேத்து ,
சந்தியா அம்மா பேரு என்ன?
நந்து அண்ணன் பேரு என்ன ?
சந்தியா அப்பா யாரு?
அம்மா தீபாவை எப்டி கூப்பிடுவேன் ? இப்டி நிறைய கேள்விகள் .. பல சமயம் சரியான பதில்கள் ..
எனக்கு மித்ரா கிட்ட ரொம்ப புடிச்ச இன்னொரு ரொம்ப நல்ல விஷயம் , ஏதாவது பதில் தெரியலை னா, எனக்கு தெரியலையே ன்னு ஒத்துப்பா...பதிலை நல்ல கிட்ட கேட்டு சொல்லி பாத்துப்பா.. முடிஞ்சவரை அடுத்த தடவை சரியாய் சொல்லிடுவா ..
இப்போ பெருகி  வரும் nueclier  குடும்ப  அமைப்பில் , இவளின் சொந்தங்கள் மீதான பிடிப்பு ஆறுதலும் சந்தோஷமும் தருது.. எப்பவும் இப்டியே இருக்கனும் ..

No comments:

Post a Comment